×

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த அரசு அமரர் ஊர்தி

சென்னை: அச்சிறுப்பாக்கத்தில், அரசு மருத்துவமனை அமரர் ஊர்தி, நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி ஆகியவை உள்ளன. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் உடல்களை, அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து சடலத்தை எடுத்து கொண்டு, அமரர் ஊர்த்தி மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் சென்றது. அங்கு சடலத்தை இறக்கிவிட்டு, மீண்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வாகனத்தை டிரைவர் இயக்கினார்.

அப்போது, செல்லும் வழியில், வாகனத்தை நிறுத்திய டிரைவர், அங்கிருந்த கடையில் டீ குடிக்க சென்றார். அப்போது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், ஓட்டுனர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.     உடனடியாக அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வாகனம் முழுமையாக எரிந்தது. வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,maturantakam acciruppakkat ,state , Government of Tamil Nadu,maturantakam
× RELATED டெல்லியில் உள்ள வருமான வரித்துறை...